Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அபிநந்தனை நிச்சயம் மீட்டுவிடுவோம் என வாக்குறுதி கொடுத்தேன் - இந்திய விமானப்படை முன்னாள் தளபதி

அபிநந்தனை நிச்சயம் மீட்டுவிடுவோம் என வாக்குறுதி கொடுத்தேன் - இந்திய விமானப்படை முன்னாள் தளபதி

By: Karunakaran Thu, 29 Oct 2020 8:02:06 PM

அபிநந்தனை நிச்சயம் மீட்டுவிடுவோம் என வாக்குறுதி கொடுத்தேன் - இந்திய விமானப்படை முன்னாள் தளபதி

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ந்தேதி பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்தியா தாக்குதல் நடத்தியது. இதனால் கடும் ஆத்திரமடைந்த பாகிஸ்தான் மறுநாள் காஷ்மீருக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த முயன்றபோது, பாகிஸ்தானின் போர் விமானங்களை இந்திய விமானப்படை விரட்டி அடித்தது. இந்த சண்டையின் போது இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனின் விமானம் தாக்குதலுக்கு உள்ளானதால் அவர் பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்தார்.

இதனால் அவரை போர் கைதியாக பாகிஸ்தான் சிறை பிடித்தது. அபிநந்தனை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்றும் இல்லையேல் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை விடுத்தது. அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளும் பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுக்க மார்ச் 1-ந்தேதி அபிநந்தன் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், அபிநந்தன் தங்கள் பிடியில் இருந்த போது இவ்விவகாரம் குறித்து பாகிஸ்தான் அதிகாரிகளின் உயர்மட்டத்திலான அவசர ஆலோசனை நடைபெற்றது.

abhinandan,former commander,indian air force,bs tanova ,அபிநந்தன், முன்னாள் தளபதி, இந்திய விமானப்படை, பி.எஸ்.தனோவா

இந்த கூட்டத்தில் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் பாஜ்வாவின் கால்கள் நடுங்கியதாவும், விவாதத்தின் போது அவருக்கு வியர்த்து ஊற்றியதாகவும் நேற்று பாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவர் நினைவு கூர்ந்தார். தற்போது பாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவரின் பேச்சு குறித்து இந்திய விமானப்படையின் முன்னாள் தளபதி பி.எஸ்.தனோவா கருத்து தெரிவித்துள்ளார். அபிநந்தனை நிச்சயம் மீட்டுவிடுவோம் என அவரின் தந்தையிடம் நான் வாக்குறுதி கொடுத்தேன் என்று பி.எஸ். தனோவா கூறினார்.

மேலும் அவர், பாகிஸ்தான் மந்திரியின் பேச்சில் (பாகிஸ்தான் மீது சரியாக 9 மணியளவில் இந்தியா தாக்குதல் நடத்தும்) நமது ராணுவம் பதிலடி தாக்குதலுக்கு தயாராக இருந்தது. பாகிஸ்தான் ராணுவத்தின் முன்கள நிலைகளை முற்றிலும் அழிக்க நாம் தயார்நிலையில் இருந்தோம். அவர்களுக்கு (பாகிஸ்தான்) நமது வலிமை என்னவென்று நன்றாக தெரியும் என்று கூறினார்.

Tags :