மக்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுப்பேன்; அங்கஜன் உறுதி
By: Nagaraj Sat, 29 Aug 2020 08:03:56 AM
மக்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுப்பேன்... இந்த அரசாங்கத்துடன் இணைந்து மக்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுப்பதாக யாழ். மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் உறுதியளித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தெரிவித்ததாவது:
என்னை நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்த மக்களுக்கு நன்றியை தெரிவித்து
கொள்கிறேன். தொடரும் காலங்களில் அவர்களுக்கு எனது சேவைகளின் ஊடாகவே
நன்றிகளை தெரிவிக்க இருக்கிறேன்.
மேலும் விவசாயம் மற்றும்
கடற்தொழில் உள்ளிட்ட துறைகளின் அபிவிருத்தி விடயங்களில் அதிக கவனம்
செலுத்தி மக்களது வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்கு நடவடிக்கைகளை
முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.