கடந்த 24 மணி நேரத்தில் கனடாவில் கொரோனாவால் 14 பேர் பலி
By: Nagaraj Mon, 19 Oct 2020 8:49:46 PM
14 பேர் பலி... கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஆயிரத்து 827பேர் பாதிக்கப்பட்டதோடு, 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 28ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை ஒரு இலட்சத்து 98ஆயிரத்து 148பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மொத்தமாக 9ஆயிரத்து 760 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 21ஆயிரத்து 276பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்துடன் இதுவரை ஒரு இலட்சத்து 67ஆயிரத்து 112பேர் பூரண குணமடைந்து வீடு
திரும்பியுள்ளனர்.
இதில் 188பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Tags :
hospital |
anxiety |
corona |