Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருப்பூரில் மொத்தம் 3 திருமணம் செய்தவர் வசமாக சிக்கினார்

திருப்பூரில் மொத்தம் 3 திருமணம் செய்தவர் வசமாக சிக்கினார்

By: Nagaraj Sat, 21 Nov 2020 8:53:47 PM

திருப்பூரில் மொத்தம் 3 திருமணம் செய்தவர் வசமாக சிக்கினார்

அங்க ஒன்று, இங்க ஒன்று, அடுத்ததாக ஒன்றுன்னு மொத்தம் 3 கல்யாணம் செய்தவர் போலீஸ் விசாரணையில் சிக்கியுள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் செல்லம் நகர் பகுதியை சேர்ந்த சின்ன மருதுபாண்டியனுக்கும், இடுவம்பாளையம் பகுதியை சேர்ந்த பிருந்தாவுக்கும் கடந்த 2011 ம் ஆண்டில் திருமணம் நடைபெற்றது.
திருமணம் நடந்து ஒரு மாதம் சென்ற பிறகு, மாமியார் மாரியம்மாள், என் மகன் வெளிநாட்டில் வேலை பார்த்தவன். அவனுக்கு நீங்க போட்ட பவுன் எல்லாம் பத்தாது.

அதனால மேலும் 20 பவுன்நகையும் ஒரு லட்சம் பணமும் கேட்டு பிருந்தாவிடம் துன்புறுத்தி இருக்கிறார். கணவரிம் இதுகுறித்து சொல்லியபோது, அம்மா சொல்லுகிறபடி நடந்துகொள் என்றிருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த பிருந்தா தனது பெற்றோரிடம் சொல்லி அழுதிருக்கிறார். பெற்றோர் எவ்வளவோ சொல்லியும் பயனில்லை.

இதற்கிடையில் தலைபிரசவத்திற்காக பிருந்தா தாய் வீட்டிற்கு சென்றிருந்துள்ளார். இந்த நேரத்தில் சின்ன மருது பாண்டியனுக்கு அவசர அவசரமாக வேறு ஒரு பெண் பார்த்து பேசி திருமணமும் செய்து வைத்துவிட்டார் மாரியம்மாள். இந்த விவரம் தெரிந்து பிருந்தாவும், அவரது குடும்பத்தினரும் ஆவேசப்பட்ட நேரத்தில், சின்ன மருது பாண்டி மலேசியாவில் வேலை பார்த்தபோது அங்கு ஒரு பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வந்ததும் தெரியவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே நடந்த திருமணத்தையும் மறைத்து தன்னை கல்யாணம் செய்து, இப்போது மேலும் சட்டத்திற்கு புறம்பாக இன்னொரு பெண்ணையும் திருமணம் செய்துள்ள சின்ன மருதுபாண்டியன் மீது திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிருந்தா புகார் செய்தார். இதையடுத்து போலீசார் சின்ன மருது பாண்டியனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :