Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருச்சி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 0.5 சதவீதமாக குறைந்தது

திருச்சி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 0.5 சதவீதமாக குறைந்தது

By: Monisha Tue, 01 Dec 2020 5:06:29 PM

திருச்சி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 0.5 சதவீதமாக குறைந்தது

தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. திருச்சி மாவட்டத்தில் ஒரு மாதத்துக்கு முன்பு வரை தினமும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சராசரியாக 100-ஐ தாண்டி இருந்தது. ஆனால் தற்போது பாதிப்பு கட்டுக்குள் வந்து நாளொன்றுக்கு சராசரியாக 20 முதல் 25 பேர் வரை மட்டுமே பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

திருச்சி மாவட்டத்தில் இதுவரை 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை ஒருபுறம் அதிகரித்து இருந்தாலும், அதில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துக் கொண்டு வருகிறது.

trichy,corona virus,infection,treatment,testing ,திருச்சி,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,பரிசோதனை

திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆய்வகத்தில் தினமும் 1, 800 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை 2 லட்சத்து 44 ஆயிரத்து 305 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு 30 சதவீதமாக இருந்த பாதிப்பு தற்போது 0.5 சதவீதமாக குறைந்துள்ளது.

பாதிப்பு குறைந்தாலும் குளிர்காலத்தில் பொதுமக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். தற்போது கொரோனா வைரசின் தாக்கம் குறைந்து வருவதைக் கண்டு அலட்சியமாக இருக்காமல், வரும் நாட்களில் முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் போன்றவற்றை எச்சரிக்கையுடன் மேற்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

Tags :
|