Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வேலூர் மாவட்டத்தில் மேலும் 126 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

வேலூர் மாவட்டத்தில் மேலும் 126 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

By: Monisha Wed, 29 July 2020 11:34:33 AM

வேலூர் மாவட்டத்தில் மேலும் 126 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

வேலூர் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 126 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. தமிழகத்தில் நோய் தொற்று பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 27 ஆயிரத்து 688 ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 1 லட்சத்து 66 ஆயிரத்து 956 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட்டுள்ளனர். ஆனாலும், தமிழகத்தில் 3 ஆயிரத்து 659 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.

vellore district,corona virus,infection,treatment,kills ,வேலூர் மாவட்டம்,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,பலி

இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 126 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக 126 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,534 ஆக உயர்ந்துள்ளது. வேலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை 56 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த வேலூர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் பொதுமக்கள் வெளியில் செல்லும் போது முக கவசம் மற்றும் சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Tags :