Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மதுரை மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா...பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தது!

மதுரை மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா...பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தது!

By: Monisha Wed, 08 July 2020 12:10:39 PM

மதுரை மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா...பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தது!

மதுரை மாவட்டத்தில் ஏற்கனவே 4,674 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 335 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்துள்ளது. நேற்று புதிதாக 3 ஆயிரத்து 616 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 18 ஆயிரத்து 594 ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 45 ஆயிரத்து 839 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 545 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 71 ஆயிரத்து 116 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 1,636 பேர் உயிரிழந்துள்ளனர்.

corona virus,vulnerability,death,treatment,discharge ,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,சிகிச்சை,டிஸ்சார்ஜ்

மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. மதுரையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஜூலை 12-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.

இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் ஏற்கனவே 4,674 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 335 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,009 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1,111 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 77 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags :
|