Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தென்கொரியாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு; கட்டுப்பாடுகள் தீவிரம்

தென்கொரியாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு; கட்டுப்பாடுகள் தீவிரம்

By: Nagaraj Fri, 21 Aug 2020 9:40:36 PM

தென்கொரியாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு; கட்டுப்பாடுகள் தீவிரம்

தென்கொரியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதால் கட்டுப்பாடுகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. அந்தவகையில் தென்கொரியாவிலும் கடந்த சில நாட்களாக கொரோனா வால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தென்கொரியாவில் கடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு தற்போது சில நாட்களாக நாள்தோறும் 300க்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

increasing,social space,compliance,restrictions ,அதிகரித்து, சமூக இடைவெளி, கடைபிடித்தல், கட்டுப்பாடுகள்

இன்று புதிதாக 367 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 315 பேர் உள்நாட்டினர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 16,670-ஆக அதிகரித்துள்ளதாக தென்கொரியாவின் தொற்று பரவல் மற்றும் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 8 நாட்களில் 1,900 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கொரோனா தொற்று நாள்தோறும் அதிகரித்து வருவதால் சமூக இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Tags :