Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தாய்லாந்தில் ரயிலுடன் பஸ் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிப்பு

தாய்லாந்தில் ரயிலுடன் பஸ் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிப்பு

By: Nagaraj Mon, 12 Oct 2020 3:57:25 PM

தாய்லாந்தில் ரயிலுடன் பஸ் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிப்பு

பலி எண்ணிக்கை அதிகரிப்பு... தாய்லாந்தில் ரயிலுடன் பேருந்து மோதிய விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 30 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கிலிருந்து சா சோயெங் சாவோ மாகாணத்தில் உள்ள ஒரு கோயிலுக்குச் சென்றுகொண்டிருந்த பேருந்தே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை ரயிலுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியது.

பாங்காக் நகருக்கு 63 கிலோமீட்டர் கிழக்கே இருப்புப் பாதையைப் பேருந்து கடந்தபோது, அதன்மீது ரயில் வேகமாக மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றது. இந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது..

thailand,accident,death toll,increase ,தாய்லாந்து, விபத்து, பலி எண்ணிக்கை, அதிகரிப்பு

மேலும் அங்கு தொடர்ந்து மீட்புப் பணிகள் இடம்பெற்று வருவதுடன், படுகாயமடைந்தவர்களில் பலர் உயிருக்குப் போராடிவரும் நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுவதாக மாகாண ஆளுநர் மைட்ரீ ரிதிலனண்ட் (Maitree Tritilanond ) தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இவ்வாறான கோர விபத்துக்கள் தாய்லாந்தில் பொதுவானவை எனவும் இது உலகின் மிக ஆபத்தான சாலைகள் கொண்ட நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :