Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை... ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை... ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

By: Monisha Thu, 12 Nov 2020 2:16:56 PM

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை... ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.

கர்நாடகா மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வந்தது. இதனிடையே நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

இந்தநிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.

cauvery,hogenakkal,rain,tourism,travelers ,காவிரி,ஒகேனக்கல்,மழை,சுற்றுலா,பயணிகள்

அதன்படி நேற்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பால் ஐந்தருவி, மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

இதனிடையே, ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி, சினிபால்ஸ் மற்றும் காவிரி ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர். மேலும் சுற்றுலா பயணிகள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் காவிரி ஆற்றில் உற்சாகமாக பரிசல் சவாரி செய்தனர்.

Tags :
|