Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் இருந்து வருபவர்களால் தஞ்சையில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

சென்னையில் இருந்து வருபவர்களால் தஞ்சையில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

By: Monisha Tue, 23 June 2020 5:17:46 PM

சென்னையில் இருந்து வருபவர்களால் தஞ்சையில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 62 ஆயிரத்து 87 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 794 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களால்தான் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

chennai,coronavirus,tanjore district,treatment,infection ,சென்னை,கொரோனா வைரஸ்,தஞ்சை மாவட்டம்,சிகிட்சை,பாதிப்பு

நேற்று முன்தினம் வரை தஞ்சை மாவட்டத்தில் 272 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்று மட்டும் 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் சென்னையில் இருந்து வந்தவர்கள் ஆவர். இதன் மூலம் தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 308 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்ட 36 பேரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் தஞ்சை மருத்துவமனையில் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்கள் 5 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர்.

Tags :