Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சேலம் மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா...ஒரே நாளில் 100 பேருக்கு பாதிப்பு உறுதி

சேலம் மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா...ஒரே நாளில் 100 பேருக்கு பாதிப்பு உறுதி

By: Monisha Fri, 03 July 2020 6:28:07 PM

சேலம் மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா...ஒரே நாளில் 100 பேருக்கு பாதிப்பு உறுதி

சேலம் மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனாவால் 1,034 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று ஒரே நாளில் 100 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் கடும் தீவிரமாக பரவி வருகிறது. நேற்று புதிய உச்சமாக 4 ஆயிரத்து 343 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை நெருங்கியுள்ளது. மாநிலத்தில் இதுவரை கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 98 ஆயிரத்து 392 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து 56 ஆயிரத்து 21 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனால், தமிழகத்தில் இதுவரை கொரோனா தாக்குதலால் 1,321 பேர் உயிரிழந்துள்ளனர்.

salem district,coronavirus,infection,kills,treatment ,சேலம் மாவட்டம்,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,சிகிச்சை

சேலம் மாவட்டத்தில் நேற்று வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,034 இருந்தது. இந்நிலையில், சேலத்தில் இன்று ஒரே நாளில் 100 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, சேலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,134 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இந்த மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. மக்கள் ஒவ்வொருவரும் முக கவசம் அணிவதுடன் சமூக இடைவெளியைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என சுகாதாரத் துறையினர் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags :
|