Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நெல்லை மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா பரவல்...பாதிப்பு எண்ணிக்கை 934-ஆக உயர்வு

நெல்லை மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா பரவல்...பாதிப்பு எண்ணிக்கை 934-ஆக உயர்வு

By: Monisha Fri, 03 July 2020 1:26:22 PM

நெல்லை மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா பரவல்...பாதிப்பு எண்ணிக்கை 934-ஆக உயர்வு

நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே 879 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 55 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் கடும் தீவிரமாக பரவி வருகிறது. நேற்று புதிய உச்சமாக 4 ஆயிரத்து 343 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை நெருங்கியுள்ளது. மாநிலத்தில் இதுவரை கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 98 ஆயிரத்து 392 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து 56 ஆயிரத்து 21 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனால், தமிழகத்தில் இதுவரை கொரோனா தாக்குதலால் 1,321 பேர் உயிரிழந்துள்ளனர்.

coronavirus,influence,death,treatment ,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,சிகிச்சை

தமிழகத்தில் சென்னையில் தான் கொரோனா வைரஸ் கடுமையாக பரவி வருகிறது. இந்நிலையில் தற்போது மாநிலத்தின் பிற மாவட்டங்களிலும் நோய் பரவல் அதிகரித்து வருகிறது.

நெல்லை மாவட்டத்தில் நேற்று வரை 879 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 614 கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 257 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனாவுக்கு 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று நெல்லை மாவட்டத்தில் 55 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 934-ஆக உயர்ந்துள்ளது.

Tags :
|