Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ராணுவ தளங்களை பரஸ்பரம் பயன்படுத்திக்கொள்ள இந்தியாவும், ஜப்பானும் ஒப்பந்தத்தில் கையெழுத்து

ராணுவ தளங்களை பரஸ்பரம் பயன்படுத்திக்கொள்ள இந்தியாவும், ஜப்பானும் ஒப்பந்தத்தில் கையெழுத்து

By: Karunakaran Fri, 11 Sept 2020 2:20:17 PM

ராணுவ தளங்களை பரஸ்பரம் பயன்படுத்திக்கொள்ள இந்தியாவும், ஜப்பானும் ஒப்பந்தத்தில் கையெழுத்து

இந்தியாவும், ஜப்பானும் நீண்ட காலமாக ராணுவ தளங்களை பரஸ்பரம் பயன்படுத்திக்கொள்வதற்கான பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. தற்போது இரு நாடுகளுக்கும் இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்தியா சார்பில், பாதுகாப்பு செயலாளர் அஜய் குமாரும், ஜப்பான் தூதர் சுசுகி சடோஷியும் கையெழுத்திட்டனர். ஒப்பந்தத்தின்படி, இந்தியாவில் உள்ள ராணுவ தளங்களையும், அங்குள்ள வசதிகளையும் ஜப்பான் ராணுவம் பயன்படுத்திக் கொள்ளலாம். பழுதுபார்ப்பு பணிகளை மேற்கொள்ளலாம்.

அதுபோல், ஜப்பானில் உள்ள ராணுவ தளங்களை இந்திய ராணுவம் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த ஒப்பந்தம், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இரு நாடுகளிடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்க இது உதவும். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதியை உறுதி செய்யும் என்று இந்திய ராணுவ செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

india,japan,agreement,military bases ,இந்தியா, ஜப்பான், ஒப்பந்தம், இராணுவ தளங்கள்

சீன படைகளுடன் எல்லையில் மோதல் மூளும் அபாயம் உள்ள இந்நிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜூன் மாதம், ஆஸ்திரேலியாவுடன் இதேபோன்ற ஒப்பந்தத்தை இந்தியா செய்து கொண்டுள்ளது. மேலும், அமெரிக்கா, பிரான்ஸ், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுடனும் இத்தகைய ஒப்பந்தம் ஏற்கனவே கையெழுத்தாகியுள்ளது.

இந்த ஒப்பந்தம் தொடர்பாக, பிரதமர் மோடி, பதவி விலக உள்ள ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இந்த ஒப்பந்தம், பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்கும் என்று இருவரும் கருத்து தெரிவித்தனர். இருநாட்டு உறவை வலுப்படுத்தியதில் ஷின்சோ அபேவின் உறுதிப்பாட்டையும், தலைமைப்பண்பையும் மோடி பாராட்டினார்.


Tags :
|
|