பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தும் ஆற்றல் இந்தியாவிற்கு உண்டு
By: Nagaraj Wed, 30 Dec 2020 8:44:26 PM
மத்திய அமைச்சர் தகவல்... தேவை ஏற்பட்டால், எல்லை தாண்டி சென்று, பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தும் ஆற்றல் இந்தியாவிற்கு உண்டு என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி: கடந்த சில மாதங்களில் பாகிஸ்தான் ராணுவம் 300- 400 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியது.
அதற்கு இந்திய ராணுவம் உடனடியாக பதிலடி கொடுத்தது. பாகிஸ்தான் உருவானது முதல், எல்லையில் மோசமான செயல்களில் ஈடுபட்டு வருகிறது.
காஷ்மீரில்
பயங்கரவாதத்தை ஒழிக்க இந்திய ராணுவம் செயல்பட்டு வருகிறது. இந்திய
வீரர்கள், நமது மண்ணில் மட்டுமல்லாமலும், தேவைப்பட்டால் எல்லை தாண்டி
சென்று பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்துவார்கள். இதற்கான திறன்
இந்தியாவிடம் உள்ளது. இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.