Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வெளியுறவு துறை அமைச்சர்கள் இடையேயான பேச்சை முறைப்படுத்த இந்தியா திட்டம்

வெளியுறவு துறை அமைச்சர்கள் இடையேயான பேச்சை முறைப்படுத்த இந்தியா திட்டம்

By: Nagaraj Sun, 04 Oct 2020 6:30:22 PM

வெளியுறவு துறை அமைச்சர்கள் இடையேயான பேச்சை முறைப்படுத்த இந்தியா திட்டம்

இந்தியா திட்டம்... சீனாவை முறியடிக்கும் வகையில், ஜப்பானில் தொடங்க உள்ள 4 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் இடையான பேச்சை முறைப்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய நான்கு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களிடையான பேச்சு செவ்வாயன்று ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற உள்ளது.

இந்தியப் பெருங்கடல் - பசிபிக் மண்டலத்தில் கடல்சார் பாதுகாப்பு, இணையப் பாதுகாப்பு, தொழில்நுட்பங்கள், உட்கட்டமைப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, மண்டல ஒத்துழைப்பு ஆகியன பற்றிப் பேச்சு நடத்தப்பட உள்ளது.

talks,prime minister of india,china,japan,4 countries ,பேச்சு வார்த்தை, இந்தியா, சீனா, ஜப்பான் பிரதமர், 4 நாடுகள்

5ஜி மற்றும் 5ஜி பிளஸ் தொழில்நுட்பத்தை மேம்படுத்த இணைந்து செயல்படுவது குறித்தும் இதில் பேசப்பட உள்ளது.

இந்த 4 நாடுகள் குழுவைப் பிளவுபடுத்த முயன்ற சீனா, இருதரப்பு பொருளாதார உறவுகளைப் புதுப்பிக்கலாம் என ஜப்பானிடம் தெரிவித்தது.

முதலில் 3 நாடுகளுடன் பேச்சு நடத்திய பின்னர் அந்தப் பேச்சுக்களை நடத்தலாம் என ஜப்பான் பிரதமர் யோசிகிடே சுகா, சீன அதிபர் சி ஜின்பிங்கிடம் கூறிவிட்டார்.

Tags :
|
|
|