Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • எல்லைகள் நோக்கி அதிகளவில் நகர்த்தப்படும் இந்தியாவின் T-90 பீஷ்மா பீரங்கிகள்

எல்லைகள் நோக்கி அதிகளவில் நகர்த்தப்படும் இந்தியாவின் T-90 பீஷ்மா பீரங்கிகள்

By: Nagaraj Thu, 25 June 2020 11:26:14 AM

எல்லைகள் நோக்கி அதிகளவில் நகர்த்தப்படும் இந்தியாவின் T-90 பீஷ்மா பீரங்கிகள்

இந்தியாவின் T-90 பீஷ்மா பீரங்கிகள் அதிகளவு எல்லைகள் நோக்கி நகர்த்தப்பட்டுள்ளன என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்தியா சீனா இடையே சமாதானப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதும் இருநாடுகளும் படைகளைக் குவித்த வண்ணம் உள்ளன. இந்தியா தனது சக்தி வாய்ந்த T-90 பீஷ்மா பீரங்கிகளை அதிகளவுக்கு எல்லைக்கு நகர்த்தியுள்ளது. துல்லியமான தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் இந்த பீரங்கி, ஒருநிமிடத்தில் 60 குண்டுகளைப் பொழியும் ஆற்றல் மிக்கது.

india,artillery,frontier,movement,armed forces ,இந்தியா, பீரங்கிகள், எல்லை, நகர்த்தல், படைகள் குவிப்பு

ரசாயன மற்றும் உயிரி ஆயுதங்களை கையாளும் திறன் கொண்ட இந்த பீரங்கிகள் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டவை. 48 டன் எடை கொண்ட இந்த பீரங்கி ஆயிரம் குதிரை விசை ஆற்றல் கொண்டதாகும்.

6 கிலோமீட்டர் தூரம் வரை எதிரியின் இலக்கை தாக்கக் கூடியதுமாகும். சீனாவுக்கு கடுமையான எச்சரிக்கையாக இந்த மாதத்தின் தொடக்கம் முதலே இந்த பீரங்கியை எல்லைக்கு அருகே நிறுத்தியுள்ள இந்திய ராணுவம் எல்லையில் எந்த அத்துமீறலையும் சகித்துக் கொள்ள முடியாது என்று எச்சரித்துள்ளது.

சீனாவிடமும் இந்த பீரங்கிக்கு நிகராக டி 95 பீரங்கிகள் உள்ளன. ஆனால் இந்தியாவிடம் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டி 90 பீரங்கிகள் உள்ளன. சீனாவிடம் 3500 பீரங்கிகள் மட்டுமே உள்ளன. இதனிடையே கல்வான் பகுதியில் சீனா தனது படைகளை குவித்துள்ள காட்சிகள் செயற்கைக் கோள் மூலமாக படமாக்கப்பட்டு வெளியாகி உள்ளன.

Tags :
|