Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்கும் டிரம்ப் நிர்வாகத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிப்பு

டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்கும் டிரம்ப் நிர்வாகத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிப்பு

By: Karunakaran Tue, 29 Sept 2020 09:28:21 AM

டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்கும் டிரம்ப் நிர்வாகத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிப்பு

லடாக் மோதலுக்கு பின் இந்தியாவில் டிக்-டாக் உள்பட பல சீன செயலுக்கு தடை விதிக்கப்பட்டது. அமெரிக்காவிலும் டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்க கோரிக்கை வலுத்து வந்தது. அதன்பின் , அமெரிக்கா அதிபர் டிரம்ப், டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்க கெடு விதித்தார். அதன்படி, டிக்-டாக் செயலியை ஏதாவது ஒரு நிறுவனத்திற்கு விற்றுவிட வேண்டும். இல்லையெனில் டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்கப்படும் என கூறியிருந்தார்.

சீனாவின் டிக்-டாக் மற்றும் வீ சாட் செயலிகள் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி அந்த செயலிகளுக்கு தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் ஜனாதிபதி டிரம்ப் கடந்த மாதம் 6-ந்தேதி கையெழுத்திட்டார். இந்த தடை உத்தரவு 45 நாளில் நடைமுறைக்கு வரும் என கூறப்பட்டிருந்தது.

interim injunction,trump administration,ban,tik tok ,இடைக்கால தடை உத்தரவு, டிரம்ப் நிர்வாகம், தடை, டிக் டோக்

கடந்த 20-ந்தேதி முதல் அமெரிக்காவில் டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து டிரம்ப் நிர்வாகத்தின் இந்த தடை உத்தரவை எதிர்த்து வாஷிங்டனில் உள்ள கொலம்பியா மாவட்ட கோர்ட்டில் டிக்-டாக் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதி கார்ல் நிகோல்ஸ் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

டிக்-டாக் நிறுவனம் சார்பில் ஆஜரான வக்கீல்கள் டிரம்ப் நிர்வாகத்தின் இந்த தடை உத்தரவு முதல் சட்டத் திருத்த உரிமைகளை மீறுவதாகும், வர்த்தகத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்படுவதாகவும் என்று வாதிட்டனர். அதன்பின்னர், டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்கும் டிரம்ப் நிர்வாகத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

Tags :
|