டெல்லி இந்தியா கேட் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு
By: Nagaraj Fri, 02 Oct 2020 2:50:34 PM
144 தடை உத்தரவு பிறப்பிப்பு... டெல்லியில் இந்தியா கேட் சுற்றுப் பகுதிகளில் போராட்டம் நடத்துவதைத் தடை செய்யும் வகையில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் இளம்பெண் கொலை தொடர்பாக நாட்டின் பல்வேறு நகரங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் டெல்லியில் இந்தியா கேட் சுற்றுப் பகுதிகளில் போராட்டம்
நடத்துவதைத் தடை செய்யும் வகையில் 144 தடையுத்தரவு பிறப்பித்துள்ளதாகக்
காவல்துறை இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில் ஜந்தர் மந்தரில் முன் அனுமதி பெற்று நூறு பேர் வரை போராட்டத்தில் பங்கேற்கலாம் எனக் காவல்துறை அறிவித்துள்ளது.
Tags :
protest |
police |