Advertisement

படகு விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் பலி

By: Nagaraj Sat, 05 Sept 2020 09:34:15 AM

படகு விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் பலி

படகு விபத்தில் ஒருவர் பலி... கனடாவில் ஏற்பட்ட படகு விபத்தில் யாழ். வல்வெட்டித்துறை தீருவிலையைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

நேற்றுமுன்தினம் ரொறன்ரோ கடற்பகுதியில் ஏற்பட்ட இவ்விபத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையான 46 வயதான இலங்கைகோண் பல்லவநம்பி என்பவரே உயிரிழந்துள்ளார்.

jaffna,family,boat accident,canada ,யாழ்ப்பாணம், குடும்பஸ்தர், படகு விபத்து, கனடா

சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது: ஆறு பயணிகளுடன் அதிவேகமாக பயணித்த படகு கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. இதன் போது 6 பேர் காயமடைந்தனர். படகில் பயணித்த அனைவரும் தமிழர்கள் என தெரிவிக்கப்படுகிறது. இதில் இலங்கைகோண் பல்லவநம்பி பலியாகி உள்ளார்.

இச்சம்பவம் குறித்து ரொறன்ரோ காவல்துறையின் போக்குவரத்து சேவைகள் பிரிவும் கடல் பிரிவும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags :
|
|