வெளிநாட்டு பயணிகள் வருகைக்கு தடை விதித்தது ஜப்பான்
By: Nagaraj Mon, 28 Dec 2020 09:38:03 AM
ஐப்பான்: தடை விதிப்பு... பிரிட்டனில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா தங்கள் நாட்டிலும் பரவுவதைத் தவிா்க்கும் வகையில், அனைத்து வெளிநாட்டுப் பயணிகளின் வருகையையும் ஜப்பான் தடை செய்துள்ளது.
இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
புதிய வகை கொரோனா ஜப்பானில் பரவுவதைத் தவிா்ப்பதற்காக, அனைத்து
நாடுகளிலிருந்தும் வெளிநாட்டினா் நாட்டுக்குள் வருவதற்குத் தடை
விதிக்கப்படுகிறது.
இன்று திங்கள்கிழமை தொடங்கி வரும் 31-ஆம் தேதி
வரை இந்தத் தடை அமலில் இருக்கும் என்று அந்த அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, புதிய வகை கொரோனா அச்சம் காரணமாக
பிரிட்டன் மற்றும் தென் கொரியாவிலிருந்து மட்டும் வெளிநாட்டினா் வருவதற்கு
ஜப்பான் தடை விதித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.