Advertisement

ஒரு கிலோ ரூ.4300க்கு விற்பனையான மல்லிகைப்பூ

By: Nagaraj Thu, 31 Dec 2020 12:16:34 PM

ஒரு கிலோ ரூ.4300க்கு விற்பனையான மல்லிகைப்பூ

உச்சத்தை தொட்ட மல்லிகைப்பூ விலை... ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஒரு கிலோ மல்லிகைப்பூ 4,300 ரூபாய்க்கு விற்பனையானது.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பூ மார்க்கெட்டுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் டன் கணக்கில் பூக்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. அவற்றை உள்ளூர் வியாபாரிகள் வரை வாங்கிச் செல்வது மட்டுமல்லாமல், சென்னை, கோவை, சேலம், பெங்களூர், மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

jasmine,price hike,public,concern,farmers ,மல்லிகைப்பூ, விலை உயர்வு, பொதுமக்கள், கவலை, விவசாயிகள்

கடும் பனிப்பொழிவு காரணமாக கடந்த சில நாட்களாகக் பூக்கள் வரத்து வெகுவாகக் குறைந்துள்ளது. இந்நிலையில் நாளை ஆங்கில புத்தாண்டு என்பதால் மல்லிகை உள்ளிட்ட பல்வேறு பூக்களின் தேவை அதிகரித்துள்ளது .

ஒரு கிலோ மல்லிகைப்பூ அதிகபட்சமாக 4,300 ரூபாய்க்கு விற்பனையானது. விலை அதிகரிப்பு விவசாயிகளுக்கு ஒருபுறம் மகிழ்ச்சி அளித்தாலும் போதிய வரத்து இல்லாததால் கவலை அடைந்துள்ளனர். புத்தாண்டு நேரத்தில் பூக்களின் விலை அதிகரித்திருப்பது பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது .

Tags :
|