- வீடு›
- செய்திகள்›
- எஸ்பிபி அசையாமல் இருப்பதைப் பார்ப்பதற்கு என் மனம் தாங்காது; எஸ்பிபி மறைவு குறித்து கேஜே யேசுதாஸ்
எஸ்பிபி அசையாமல் இருப்பதைப் பார்ப்பதற்கு என் மனம் தாங்காது; எஸ்பிபி மறைவு குறித்து கேஜே யேசுதாஸ்
By: Monisha Sat, 26 Sept 2020 6:30:48 PM
பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் நேற்று மதியம் காலமான நிலையில் அவருக்கு ஒட்டுமொத்த இந்திய திரையுலகைச் சேர்ந்த கலைஞர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். திரை உலகில் மட்டுமின்றி அரசியல்வாதிகள் தொழிலதிபர்கள் உள்பட பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
இந்த நிலையில் எஸ்பிபி அவர்களுக்கும், பிரபல பாடகர் கேஜே யேசுதாஸ் அவர்களுக்கும் இருந்த நெருக்கமான நட்பு அனைவரும் அறிந்தது தான். இந்த நிலையில் எஸ்பிபி மறைவுக்கு கேஜே யேசுதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளார்
எஸ்பிபி நடித்த 'சிகரம்' என்ற படத்தில் அவர் கம்போஸ் செய்த 'அகரம் இப்போ சிகரம் ஆச்சு' என்ற பாடலை கேஜே ஜேசுதாஸ் பாடினார் என்பதும் இந்த பாடல் இன்றளவும் கோடிக்கணக்கானோர் மனதில் இடம்பிடித்த பாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி எஸ்பிபி மற்றும் கேஜே யேசுதாஸ் இணைந்து 'காட்டுக்குயிலு மனசுக்குள்ள' உள்பட பல பாடல்களை இணைந்து பாடி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் வெளியான 'கேணி' என்ற படத்தில் 'அய்யாசாமி, இது நம்ம பூமி' பாடலை இருவரும் இணைந்து பாடியது மட்டுமின்றி அவர்கள் பாடிய காட்சிகளும் அந்த படத்தில் இடம் பெற்றிருக்கும் என்பதும் இந்த பாடல் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.