Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் கனமழையால் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் கனமழையால் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு

By: Nagaraj Mon, 29 June 2020 5:46:13 PM

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் கனமழையால் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு

நிலச்சரிவு, வெள்ளப் பெருக்கால் 12 பேர் பலி... சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 10 பேர் மாயமானதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மியானிங் கவுண்டியில் பெய்த கனமழையால், விவசாய நிலங்கள், சாலைகள், பாலங்கள், மேலும் பல கட்டுமானங்கள் சேதமைடைந்தன. இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

heavy rains,floods,landslides,makeshift tents,china ,கனமழை, வெள்ளம், நிலச்சரிவு, தற்காலிக கூடாரங்கள், சீனா

7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்த நிலையில், யிஹாய் என்ற இடத்தில் தற்காலிக கூடாரங்கள் அமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இதே போல் சீனாவின் ஹூபே மாகாணத்தில் பெய்த கனமழையால், ஒன்றரை மீட்டர் உயரத்துக்கு வெள்ள நீர் கட்டுமானங்களுக்குள் புகுந்தது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இதில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீட்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Tags :
|