Advertisement

முதலமைச்சர் தாயார் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்

By: Monisha Tue, 13 Oct 2020 10:00:43 AM

முதலமைச்சர் தாயார் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் (93) உடல்நலக்குறைவால் காலமானார். சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதுகு வலிக்காக சிகிச்சை பெற்று வந்த அவர், மாரடைப்பு காரணமாக அதிகாலை 1 மணியளவில் காலமானார்.

தகவல் அறிந்ததும் சாலை மார்க்கமாக காரில் சேலம் புறப்பட்டுச் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாயாரின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். தவுசாயம்மாளுக்கு பழனிசாமியுடன் கோவிந்தராஜ் என்ற மகனும் விஜயலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.

edappadi palanisamy,mother,deceased,mourning,political leaders ,எடப்பாடி பழனிசாமி,தாயார்,காலமானார்,இரங்கல்,

முதலமைச்சரின் தாயார் உடலுக்கு அமைச்சர்கள், அதிகாரிகள், உறவினர்களும் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் முதலமைச்சரின் தாயார் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தாயாரை இழந்து வாடும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Tags :
|