Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறந்து விடுங்கள்; முதல்வருக்கு நடிகர் விஜயகுமார் கடிதம்

செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறந்து விடுங்கள்; முதல்வருக்கு நடிகர் விஜயகுமார் கடிதம்

By: Nagaraj Wed, 18 Nov 2020 9:40:17 PM

செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறந்து விடுங்கள்; முதல்வருக்கு நடிகர் விஜயகுமார் கடிதம்

முதலமைச்சருக்கு கடிதம்... செம்பரம்பாக்கம் ஏரியில் உடனடியாக நீர் திறக்க உத்தரவிட வேண்டும் என முதலமைச்சசர் எடப்பாடி பழனிசாமிக்கு நடிகர் விஜயகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர் கனமழை காரணமாக சென்னையின் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வரும் நிலையில் 22 அடியை எட்டியப்பிறகு தண்ணீர் திறக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஏரியில் இருந்து உடனே தண்ணீர் திறக்க வேண்டும் என முதலமைச்சருக்கு நடிகர் விஜயகுமார் கடிதம் எழுதியுள்ளார்.
அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ஈக்காட்டுதாங்கல் கலைமகள் நகர் பகுதியில் நான் பல வருடங்களாக குடியிருந்து வருகிறேன். கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்ட பொழுது எங்களது பகுதியலிருந்து அடையாறு வரைக்கும் பல ஆயிரம் வீடுகள் சேதமடைந்தன. உயிர் சேதமும் ஏற்பட்டது.

vijayakumar,sembarambakkam,lake,water,opening ,விஜயகுமார், செம்பரம்பாக்கம்,  ஏரி, தண்ணீர், திறப்பு

இந்த ஆண்டும் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்மட்டம் 21 அடியைத் தாண்டி உயர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலைமை நீடிக்குமேயானால் 2015-ம் ஆண்டைப் போல பெரும் பாதிப்பு ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். ஆகவே தாங்கள் கவனத்தில் இதைக் கொண்டு, முன்னேற்பாடாக ஏரியில் உள்ள தண்ணீரை அளவுடன் திறந்துவிட உத்தரவு பிறப்பித்தால் கரையோரம் இருப்பவர்களுக்கு உயிர் மற்றும் பொருள் சேதம் ஏற்படாமல் தடுக்க இயலும்.

எனவே தயவு செய்து இதற்கான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டுமென தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். தங்களால் இதை செய்ய இயலும் என நான் ஒருமனதாக நம்புகிறேன். கொரோனா என்னும் கொடு நோயிலிருந்து நம் தமிழக மக்களை எவ்வண்ணம் காப்பாற்றிக் கொண்டிருக்கிறீர்களோ, அவ்வண்ணமே கரையோரம் வசிக்கும் மக்களையும் காப்பாற்ற வேண்டுமென்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Tags :
|
|