Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பரபரப்பை ஏற்படுத்தி உள்ள போலீஸ்காரரின் கோரிக்கை கடிதம்

பரபரப்பை ஏற்படுத்தி உள்ள போலீஸ்காரரின் கோரிக்கை கடிதம்

By: Nagaraj Fri, 20 Nov 2020 3:54:15 PM

பரபரப்பை ஏற்படுத்தி உள்ள போலீஸ்காரரின் கோரிக்கை கடிதம்

பரபரப்பை கிளப்பிய கோரிக்கை கடிதம்... தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு, போலீஸ்காரர் எழுதிய கோரிக்கை கடிதம், சமூக வலைதளங்களில் உலா வருவது, உயரதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையை சேர்ந்த போலீஸ்காரர் தமிழ்செல்வன், தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு அனுப்பிய கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளதாவது:

நான், போலீசில், 2003 முதல் பணிபுரிகிறேன். சட்டசபை தேர்தல் வாக்குறுதி தொடர்பாக, மனுக்களை, தேர்தல் அறிக்கை வரைவு குழுவுக்கு அனுப்ப, நீங்கள் வெளியிட்ட அறிவிப்பை ஏற்று அனைத்து போலீஸ் சார்பில், இக்கோரிக்கை மனுவை வழங்குகிறேன். அரசு பணிகளில், கூடுதல் பணிச்சுமை, தொடர்ந்து பணிபுரியும் துறையாக போலீஸ் உள்ளது. பலர், மன அழுத்தத்திலும், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், குறைந்த சம்பளத்திலும், தமிழகத்தில் பணிபுரிகிறோம்.

எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற, எந்த அதிகாரிகள், ஆட்சியாளர்கள் முன்வரவில்லை. வரும் தேர்தலில் வெற்றி பெற்று, முதல்வரானால், எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவீர்கள் என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம். போலீசாருக்கு, 8:00 மணி நேர பணி வரையறைசெய்யப்பட வேண்டும்.

policeman,letter,stalin,request,shock ,போலீஸ்காரர், கடிதம், ஸ்டாலின், கோரிக்கை, அதிர்ச்சி

தினமும் போலீசாரின் குறை, புகார்களை அணுக, மாவட்டந்தோறும் தன்னார்வலர், அடிமட்ட போலீசார் அடங்கிய குழு ஏற்படுத்த வேண்டும். சங்கம் அமைக்க அனுமதி தேவை. சீருடையில் உள்ள, 'மெட்டல் பட்டன்' முறையை மாற்ற வேண்டும். வார விடுப்பு அவசியம். சட்டம் - ஒழுங்கு பணியில் உள்ள போலீசாருக்கு, தற்போது வழங்கப்படும் வாகன எரிபொருள் படி, 300ஐ, 1,000 ரூபாயாக உயர்த்துங்கள்.

குறைந்தபட்சம், 20 லிட்டர் பெட்ரோல் வழங்குங்கள். நிர்வாக வசதி எனக்கூறி, இடமாற்றம் செய்வதை தவிர்த்து வரன்முறைப்படுத்துங்கள். பெண் போலீசாரை, மகளிர் ஸ்டேஷன்களில் மட்டும் பணி அமர்த்துங்கள். பணியின்போது மரணமடைவோருக்கு, 50 லட்சம் ரூபாய், வீரமரணம் அடைந்தால், 1 கோடி ரூபாய், குடும்பத்தில் ஒருவருக்கு கட்டாய அரசு பணி வழங்குங்கள் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கடிதம், போலீசாரின்,'வாட்ஸ் ஆப், பேஸ் புக்' குழு மட்டுமின்றி, சமூக வலைதளங்களில் உலா வருவது, போலீஸ் உயரதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
|
|