Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • குப்புற படுக்க வைத்தால் உயிரைக்காப்பாற்றி விடலாம் - விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

குப்புற படுக்க வைத்தால் உயிரைக்காப்பாற்றி விடலாம் - விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

By: Karunakaran Sun, 13 Sept 2020 09:24:04 AM

குப்புற படுக்க வைத்தால் உயிரைக்காப்பாற்றி விடலாம் - விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

உலகம் முழுவதும் பரவி மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் குறித்து பல்வேறு ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. கொரோனா நோயின் தீவிர தாக்கத்தால் நுரையீரல் பாதிக்கிறது. அதனால் சுவாசம் சிக்கலாகிறபோது, அத்தகைய நோயாளிகளை வென்டிலேட்டர்களில் வைக்கிறார்கள். இந்நிலையில் வென்டிலேட்டரில் வைக்கிற நிலையில் நோயாளிகளின் நிலை குறித்து, அமெரிக்காவில் நார்த்வெஸ்டெர்ன் பல்கலைக்கழகத்தின் அங்கமான பெய்ன்பெர்க் மருத்துவ கல்லூரி விஞ்ஞானிகள் ஆய்வு ஒன்றைநடத்தியுள்ளனர்.

இந்த ஆய்வின் முடிவை ‘பிரிட்டிஷ் ஜர்னல் ஆப் அனஸ்தீசியா’வில் வெளியிட ஏற்றுக்கொண்டுள்ளனர். அதில், வென்டிலேட்டர்களில் வைக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளை முகம் குப்புற படுக்க வைக்கிறபோது, அது அவர்களின் சுவாசத்தை எளிதாக்கும். அவர்களின் உயிரைக் காப்பாற்றி விடலாம். அதே நேரத்தில் அது அவர்களுக்கு நிரந்தர நரம்பு சேதத்தை ஏற்படுத்தி விடும் என கண்டறியப்பட்டுள்ளது.

lying,trash,lives,corona virus,limb veins ,குப்புற படுத்தல், உயிர்கள், கொரோனா வைரஸ், மூட்டு நரம்பு

கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் மறுவாழ்வு பெறுகிறபோது, மணிக்கட்டு, கணுக்கால் அல்லது தோள்பட்டை போன்ற முக்கியமான மூட்டுகளில் பலவீனம் ஏற்படும். இந்த உடல் பாகங்கள் உடலின் ஒரு பக்கத்தில் முற்றிலும் முடங்கி விடும். இது அதிர்ச்சி தருகிற பிரச்சினையாகத்தான் இருக்கிறது. கொரோனா தவிர்த்து வேறு எந்த நோயாளிகளிடமும் இந்தளவுக்கு நரம்பு பாதிப்பு காணப்படுவதில்லை என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

மேலும், கொரோனாவின் தீவிர பாதிப்புக்குள்ளான 12 முதல் 15 சதவீதம் பேர், நிரந்தர நரம்பு பாதிப்பை சந்திக்கின்றனர். இந்த வகையில் உலகமெங்கும் பல்லாயிரகணக்கானோர் இதை அனுபவிப்பதாகவும், நீரிழிவு போன்ற நோய்கள் ஏற்கனவே இருக்கிறபோது, அது கொரோனா நோயாளிகளை மீட்டெடுப்பதற்கு இடையூறாக அமைந்து விடுகிறது. இதனால் அவர்களை முழுமையாக மீட்க முடியாது. நடக்கவோ, கணினி அல்லது செல்போனை கைகளால் பயன்படுத்தவதோ கடினமாகி விடும் என்று தெரிவித்துள்ளனர்.

Tags :
|
|
|