- வீடு›
- செய்திகள்›
- மகாத்மா காந்தி 151-வது பிறந்தநாள்: பிரதமர் மற்றும் குடியரசு தலைவர் மலர் தூவி மரியாதை
மகாத்மா காந்தி 151-வது பிறந்தநாள்: பிரதமர் மற்றும் குடியரசு தலைவர் மலர் தூவி மரியாதை
By: Monisha Fri, 02 Oct 2020 09:24:09 AM
ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் அவரது 151-வது பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி மற்றும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தேசப்பிதா மகாத்மா காந்தியின் 151-வது பிறந்தநாள் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி மற்றும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
முன்னதாக, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் மோடி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
காந்தியடிகள் வாழ்க்கை, உன்னத எண்ணங்களில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது. வளமான, அன்பான இந்தியாவை உருவாக்குவதில் காந்தியின் கொள்கைகள் நமக்கு வழிகாட்டுகின்றன என்று புகழாரம் சூட்டி உள்ளார்.