Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சிறுமியை ஏமாற்றி திருமணம் மற்றும் பாலியல் பலாத்காரம் செய்தவர் கைது

சிறுமியை ஏமாற்றி திருமணம் மற்றும் பாலியல் பலாத்காரம் செய்தவர் கைது

By: Monisha Tue, 19 May 2020 2:42:03 PM

சிறுமியை ஏமாற்றி திருமணம் மற்றும் பாலியல் பலாத்காரம் செய்தவர் கைது

திருச்சி மாவட்டம் திருவரம்பூர் பகுதியை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் தனது தாய் மாரியம்மாள் மற்றும் அண்ணன் மணிகண்டனுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் மணிகண்டனுக்கு தஞ்சை மாவட்டம் வளம்பக்குடியை சேர்ந்த பெண்ணுடன் 2018-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இதனால் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு சிறுமியும் அவரது தாயாரும் வளம்பக்குடிக்கு வந்து மணிகண்டனுடன் தங்கி உள்ளனர்.

வளம்பக்குடியில் தங்கி இருந்த சிறுமி பற்றி, குருங்குளம் பகுதியை சேர்ந்த பால்ராஜ் (வயது 43) என்பவருக்கு தகவல் தெரிய வந்துள்ளது. குடும்ப வறுமை சூழலை பயன்படுத்திய பால்ராஜ் கடந்த 2019-ல் புதுக்கோட்டை மாவட்டம் கிள்ளுக்கோட்டையில் உள்ள கோவிலில் உறவினர் ஒரு சிலருடன் மட்டும் சென்று சிறுமியை திருமணம் செய்துள்ளார். ஆனால் திருமணத்தில் விருப்பமில்லாத சிறுமியை மிரட்டி பால்ராஜ் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இந்த நிலையில் சில நாட்களிலேயே சிறுமியின் தாயார் மாரியம்மாள் இறந்து போனார். இதைத் தொடர்ந்து சிறுமியை பால்ராஜ் அவருடைய வீட்டில் வைத்து சித்ரவதை செய்துள்ளார். மேலும் கொலை செய்து விடுவதாக மிரட்டி தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனையடுத்து, சிறுமிக்கு 20 வயது பூர்த்தியானது போல மோசடி செய்து சான்றிதழ் பெற்று, தஞ்சையில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் சிறுமியை வேலைக்கு சேர்த்து விட்டு உள்ளார்.

deception,rape,arrest,prosecution,pocso act ,ஏமாற்றி திருமணம்,பாலியல் பலாத்காரம்,கைது,வழக்குப்பதிவு,போக்சோ சட்டம்

அதற்கும் மேல் தற்போது, கடந்த மார்ச் மாதம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு திருமணம் நடைபெற இருந்தது. ஏற்கெனவே சிறுமியுடன் திருமணம் நடைபெற்றதை மறைத்து இத்திட்டத்தில் வழங்கும் சீர்வரிசை பொருட்கள், தங்க நகையை பெற மீண்டும் சிறுமியுடன் திருமணம் செய்ய பால்ராஜ் ஏற்பாடு செய்துள்ளார். கடந்த மார்ச் 23-ம் தேதி தஞ்சை அருகே உள்ள அற்புதாபுரத்தில் உள்ள ஒரு கோவிலில் அம்மா திருமண திட்டத்தில் சிறுமியை மீண்டும் திருமணம் செய்துள்ளார். அப்போது வழங்கப்பட்ட தங்க நகைகளை பால்ராஜ் சிறுமியிடம் இருந்து வாங்கி அடகு வைத்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன் தினம் மேட்டுப்பட்டியை சேர்ந்த சிலருக்கும் பால்ராஜூக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. தன்னுடன் தகராறில் ஈடுபட்டவர்களை கற்பழிக்க முயன்றதாக வல்லம் காவல் நிலையத்தில் பொய் புகார் கொடுக்கும் படி சிறுமியை பால்ராஜ் மிரட்டி உள்ளார். ஆனால் அவர் மறுத்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த பால்ராஜ் அவரை வீட்டில் வைத்து சரமாரியாக தாக்கி உள்ளார். உடனே சிறுமி அங்கிருந்து தப்பித்து அருகில் உள்ள வீட்டில் தன்னை காப்பாற்றுமாறு கூறி தஞ்சம் அடைந்துள்ளார்.

அவர்கள் சிறுமியை வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசாரிடம் நடந்த விவரங்களை சிறுமி தெரிவித்தார். இதையடுத்து பால்ராஜிடம் போலீசார் விசாரணை நடத்தினர் அப்போது முதலில் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறிய அவர் போலீசாரின் தீவிர விசாரணையில், சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்தது உட்பட நடந்த அனைத்து சம்பவங்களையும் ஒப்பு கொண்டார். இது குறித்த புகாரின் பேரில், பால்ராஜ் மீது போக்சோ மற்றும் குழந்தைகள் திருமண தடுப்பு சட்டம் என 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Tags :
|
|