Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பருவ மழையை முன்னிட்டு உப்பு விற்பனையில் ஆர்வம் காட்டும் உற்பத்தியாளர்கள்

பருவ மழையை முன்னிட்டு உப்பு விற்பனையில் ஆர்வம் காட்டும் உற்பத்தியாளர்கள்

By: Monisha Mon, 23 Nov 2020 4:11:13 PM

பருவ மழையை முன்னிட்டு உப்பு விற்பனையில் ஆர்வம் காட்டும் உற்பத்தியாளர்கள்

நாகை மாவட்டத்தின் வேதாரண்யம் தாலுகாவில் அகஸ்தியம்பள்ளி, கடினல்வயல், கோடியக்கரை ஆகிய 3 இடங்களில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் 6 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்த ஆண்டு வேதாரண்யம் பகுதியில் உள்ள சிறு மற்றும் குறு உப்பு உற்பத்தியாளர்கள் 3 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்தனர். தற்போது 1 லட்சம் டன் உப்பு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

monsoon,salt,production,sale,protection ,பருவமழை,உப்பு,உற்பத்தி,விற்பனை,பாதுகாப்பு

கன மழை மற்றும் சூறாவளி குறித்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் வேதாரண்யம் பகுதியில் உப்பு ஏற்றுமதி பணியில் உற்பத்தியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இங்கிருந்து தினமும் லாரிகள் மூலம் உப்பு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு கன மழை மற்றும் சூறாவளி வீசும் என வானிலை மையம் அறிவித்துள்ளதால் உப்பு இருப்பு வைத்துள்ள உற்பத்தியாளர்கள் உப்பை விரைவாக விற்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த கஜா புயலின் போது இருப்பு வைக்கப்பட்டிருந்த 1 லட்சம் டன் உப்பு முழுவதும் சேதமடைந்தது. இதனால் கடந்த 2 நாட்களாக உப்பை பாக்கெட் போட்டு லாரியில் ஏற்றும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் மழையில் இருந்து உப்பை பாதுகாக்க பிளாஸ்டிக் தார்பாய் மற்றும் பனைமட்டை வைத்து மூடும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags :
|
|