Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை இன்று முதல் தொடங்கியது; கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை

சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை இன்று முதல் தொடங்கியது; கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை

By: Monisha Mon, 07 Sept 2020 09:54:48 AM

சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை இன்று முதல் தொடங்கியது; கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை

கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, மெட்ரோ ரெயில் சேவை நாடு முழுவதும் இன்று முதல் தொடங்கியது. சென்னையிலும் வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரையிலான வழித்தடத்தில் சுமார் 5 மாதங்களுக்கு பிறகு இன்று காலை 7 மணிக்கு மெட்ரோ ரெயில் சேவை தொடங்கியது. அரசு குறிப்பிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இரவு 8 மணி வரை மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.

விமான நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான நீலநிற வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் இயங்க தொடங்கியது. செப். 9 முதல் சென்ட்ரலிருந்து கோயம்பேடு வழியே ஏர்போர்ட்டுக்கு பச்சை நிற வழித்தடத்தில் ரெயில் இயக்கப்படுகிறது.

குறிப்பாக பயண அட்டைகள் (ஸ்மார்ட் கார்டு) பெறுதல் மற்றும் ரீசார்ஜ் செய்வது மற்றும் செல்போன் உதவியுடன் மெட்ரோ ரெயில் செயலியில் 'கியூ.ஆர்.' குறியீட்டு முறையில் டிக்கெட் எடுக்கும் முறை அதிகம் ஊக்குவிக்கப்படும். தவிர்க்க முடியாத காரணத்தால் சுத்தம் செய்த டோக்கன் டிக்கெட் வழங்கப்படுகிறது. அதே சமயத்தில் கட்டணத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

chennai,metro train,fare,smart card,token ticket ,சென்னை,மெட்ரோ ரெயில்,கட்டணம்,ஸ்மார்ட் கார்டு,டோக்கன் டிக்கெட்

நாட்டிலேயே முதன் முறையாக சென்னையில் உள்ள 32 ரெயில் நிலையங்களில் உள்ள தானியங்கி கதவுகளில், பயண அட்டையை பரிசோதிக்கும் கருவி (கார்டு ரீடர்) பொருத்தப்பட்டுள்ளது. இதனால் நோய் தொற்று ஏற்படாமல் டிக்கெட் கவுண்ட்டர்களில் இருந்து விரைவாக பிளாட்பாரத்துக்கு பயணிகள் செல்ல முடியும்.

கூட்ட நெரிசலை தவிர்ப்பது, சமூக இடைவெளியை பின்பற்றுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவ்வொரு ரெயில் நிலையங்களிலும் 5 முதல் 10 பணியாளர்கள் வரை கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர். அலுவலக நேரமான காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலான நேரத்தில் 5 நிமிட இடைவெளியில் ஒரு ரெயிலும், மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியில் ஒரு ரெயிலும் இயக்கப்பட உள்ளது.

மொத்தம் 43 ரெயில் சேவைகள் இயக்கப்படுகிறது. பயணிகள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து ஏறி, இறங்க வேண்டியிருப்பதால் ரெயில் நிலையங்களில் 20 வினாடிகளுக்கு பதில் 50 வினாடிகள் ரெயில்கள் நிறுத்தப்படுகிறது. பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தாலும் திறமையாகவும், பாதுகாப்பாகவும் பயணிகளை கையாளுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், பயணிகள் எந்தவித அச்சமும் இன்றி பயணிக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags :
|