Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் 18 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கொரோனாவுக்கு சிகிச்சை - மண்டல வாரியாக முழு தகவல்

சென்னையில் 18 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கொரோனாவுக்கு சிகிச்சை - மண்டல வாரியாக முழு தகவல்

By: Monisha Sat, 11 July 2020 1:21:35 PM

சென்னையில் 18 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கொரோனாவுக்கு சிகிச்சை - மண்டல வாரியாக முழு தகவல்

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 30 ஆயிரத்து 261 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனா தாக்குதலுக்கு தமிழகத்தில் இதுவரை 1,829 பேர் பலியாகியுள்ளனர்.

மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. சென்னையில் 74 ஆயிரத்து 969 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 55 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து உள்ளனர். 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு நேற்றுவரை 1,196 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று காலை நிலவரப்படி மேலும் 24 பேர் பலியாகி உள்ளனர்

chennai,coronavirus,influence,treatment,kills ,சென்னை,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,பலி

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

கோடம்பாக்கம் - 2,383
அண்ணா நகர் - 2,075
தேனாம்பேட்டை - 1,868
ராயபுரம் - 1,476
தண்டையார்பேட்டை - 1,464
திரு.வி.க. நகர் - 1,273
அடையாறு - 1,191
அம்பத்தூர் - 1,125
வளசரவாக்கம் - 990
திருவொற்றியூர் - 802
மாதவரம் - 651
ஆலந்தூர் - 551
பெருங்குடி - 508
சோழிங்கநல்லூர் - 457
மணலி - 377

Tags :