Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா முடிந்த பின் 2 கோடிக்கும் மேற்பட்ட சிறுமிகள் பள்ளிக்கு செல்ல முடியாமல் போகலாம் - மலாலா

கொரோனா முடிந்த பின் 2 கோடிக்கும் மேற்பட்ட சிறுமிகள் பள்ளிக்கு செல்ல முடியாமல் போகலாம் - மலாலா

By: Karunakaran Mon, 21 Sept 2020 3:53:43 PM

கொரோனா முடிந்த பின் 2 கோடிக்கும் மேற்பட்ட சிறுமிகள் பள்ளிக்கு செல்ல முடியாமல் போகலாம் -  மலாலா

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இதனால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. கடந்த 6 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் திறக்கப்படாததால், மாணவர்களின் கல்வி நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

தலீபான் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டு உயிர் தப்பிய பாகிஸ்தானைச் சேர்ந்த 23 வயதான யூசுப்சாய் மலாலா நோபல் பரிசு பெற்றவர். இவர், சர்வதேச அளவில் பெண் குழந்தைகள் கல்வி மற்றும் பெண்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டு வருகிறார். தற்போது நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டம் நடைபெற்று வருகிறது.

girls,school,corona virus,malala ,பெண்கள், பள்ளி, கொரோனா வைரஸ், மலாலா

இந்நிலையில் மலாலா பேட்டி அளித்தபோது, கொரோனா பாதிப்பால் பெண்கள் கல்வி கற்பதை மேம்படுத்தும் கூட்டு முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டு இருப்பதாகவும், நோய்த் தொற்று பாதிப்பு முடிவடைந்த பின்னரும் 2 கோடிக்கும் மேற்பட்ட சிறுமிகள் மீண்டும் பள்ளிக்கு செல்ல முடியாத நிலைமை ஏற்படலாம் என்றும் தெரிவித்தார்.

மேலும் அவர், பெண்கள் கல்விக்கான இலக்கை எட்டுவதில் கடந்த 5 ஆண்டுகளில் குறைந்த அளவே சாதிக்க முடிந்து இருப்பதாகவும் கூறினார். இதுகுறித்த தகவலை பாகிஸ்தானில் இருந்து வெளிவரும் ‘டான்’ பத்திரிகை வெளியிட்டுள்ளது. கொரோனா காரணமாக பல்வேறு நாடுகளில் உள்ள பெண் குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|