Advertisement

மலை ரயில் மீண்டும் இயக்கம்; முன்பதிவு துவக்கம்

By: Monisha Wed, 30 Dec 2020 09:38:01 AM

மலை ரயில் மீண்டும் இயக்கம்; முன்பதிவு துவக்கம்

ஊட்டி மலை ரயில் சேவை கொரோனா பாதிப்பால் கடந்த மார்ச் மாதம் முதல் நிறுத்தப்பட்டது. இதனால் கடந்த ஒன்பது மாதங்களுக்கு மேலாக மலை ரயில் இயக்கப்பட வில்லை. சமீபத்தில் தனியார் நிறுவனம் வாடகைக்கு எடுத்து மலை ரயிலை இயக்கியது.

அதில் கட்டணம் உயர்த்தப்பட்டதால் பல்வேறு அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், போராட்டங்களிலும் ஈடுபட்டனர். இதனால் மலை ரயில் தனியார் மயமாக்கப்பட்டதா என்ற சந்தேகமும் எழுந்தது. இந்த நிலையில் ஒன்பது மாதங்களுக்கு பிறகு நாளை முதல் மலை ரயிலை இயக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:- மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே மலை ரயில் நாளை முதல் தினமும் இயக்கப்படுகிறது. அதேபோல் குன்னூர்-ஊட்டி இடையே மலை ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த மலை ரயிலில் பழைய கட்டணத்தில் முன்பதிவு செய்து பயணிக்கலாம்.

mountain train,booking,fare,private,protest ,மலை ரயில்,முன்பதிவு,கட்டணம்,தனியார்,எதிர்ப்பு

மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே ஒரு முறையும், குன்னூர்-ஊட்டி இடையே மூன்று முறையும் மலை ரயில் இயக்கப்படுகிறது. கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் அனைத்தையும் கட்டாயம் பயணிகள் பின்பற்ற வேண்டும். பயணிகள் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடித்து, முககவசம் அணிந்து ரயில்வேக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு மலை ரெயில் புறப்பட்டு ஊட்டியை 11.55 மணிக்கு வந்தடைகிறது. ஊட்டியில் இருந்து மதியம் 2.00 மணிக்கு புறப்பட்டு குன்னூர் வழியாக மேட்டுப்பாளையத்தை மாலை 5.30 மணிக்கு சென்றடைகிறது. குன்னூரில் இருந்து காலை 7.45 மணிக்கு மலை ரெயில் புறப்பட்டு லவ்டேல் வழியாக ஊட்டியை 9.00 மணிக்கு வந்தடைகிறது. ஊட்டியில் இருந்து 9.15 மணிக்கு புறப்பட்டு 10.20 மணிக்கு குன்னூருக்கு செல்கிறது.

ஊட்டியில் இருந்து மதியம் 12.15 மணிக்கு புறப்பட்டு குன்னூருக்கு 1.15 மணிக்கும், குன்னூரில் இருந்து மதியம் 12.35 மணிக்கு புறப்பட்டு ஊட்டிக்கு 1.45 மணிக்கும், குன்னூரில் இருந்து மாலை 4.00 மணிக்கு புறப்பட்டு ஊட்டியை 5.10 மணிக்கும், ஊட்டியில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு குன்னூரை 6.35 மணிக்கு சென்றடையும். இந்த ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags :
|