Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 234 தொகுதிகளிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்- சி.வி. சண்முகம்

234 தொகுதிகளிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்- சி.வி. சண்முகம்

By: Monisha Sun, 27 Dec 2020 12:33:58 PM

234 தொகுதிகளிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்- சி.வி. சண்முகம்

2021-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அ.தி.மு.க. சார்பில் திட்டக்குடி சட்டமன்ற தொகுதிக்கான செயல்வீரர்கள் கூட்டம் திட்டக்குடியில் நடைபெற்றது. இதற்கு கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் கே.பி கந்தசாமி, வாகை.இளங்கோவன், பாண்டியன், ராஜேந்திரன், பொன்னேரி முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அ.தி.மு.க.வின் மண்டல பொறுப்பாளரும், அமைச்சருமான சி.வி. சண்முகம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், வர இருக்கிற சட்டமன்ற தேர்தலில் நிர்வாகிகள், தொண்டர்கள் என்று அனைவரும் கருத்து வேறுபாடு ஏதுமின்றி ஒற்றுமையாக செயல்பட்டு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் கொண்டுவர வேண்டும். இந்த நோக்கத்தோடு அனைவரும் தேர்தல் பணியை செம்மையாக செய்திட வேண்டும்.

assembly election,meeting,volunteers,election work,campaign ,சட்டமன்ற தேர்தல்,கூட்டம்,தொண்டர்கள்,தேர்தல் பணி,பிரச்சாரம்

ஜெயலலிதா இறந்த பிறகு அ.தி.மு.க. அழிந்துவிட்டதாக பலர் நினைத்தனர். ஆனால் பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு நல்ல ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் மக்களிடம் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். மக்களுக்கு தெரியும் யார் நல்லவர்கள் என்று, தேர்தலில் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

உழைத்தால் மட்டுமே உயர முடியும் என்ற எண்ணத்தில் அனைவரும் எந்த பாகுபாடுமின்றி தேர்தல் பணியில் ஈடுபடவேண்டும். மேலும் ஒவ்வொரு கிளைகளிலும் பூத் கமிட்டி அமைத்து வாக்கு வங்கியை அதிகப்படுத்த வேண்டும். 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க. அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். எனவே நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் இந்த தேர்தலை எதிர்கொண்டு எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதலமைச்சராக்க பாடுபட வேண்டும் என அவர் பேசினார்.

Tags :