Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • எதிர்காலம் குறித்து திருப்தியான தீர்வை தெரிவிக்கும் நாடி ஜோதிடம்

எதிர்காலம் குறித்து திருப்தியான தீர்வை தெரிவிக்கும் நாடி ஜோதிடம்

By: Nagaraj Mon, 19 Oct 2020 4:22:02 PM

எதிர்காலம் குறித்து திருப்தியான தீர்வை தெரிவிக்கும் நாடி ஜோதிடம்

குழந்தைகளின் கல்வி, திருமணம், சொத்து பிரச்னை உட்பட பல விஷயங்கள் பற்றி தெளிவாக நாடி ஜோதிடம் பார்த்து தேடி வருபவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வை காட்டி பாராட்டுக்களை குவித்து வருகிறார் மும்பை நாடி ஜோதிடர் திரு. எம். ஆர். ரவி.

நாடி ஜோதிடத்தின்படி பொதுவாக, ஒருவருடைய பிறந்த ஜாதகமானது, அவர் எந்த மாதிரிப் பலன்களை அனுபவிக்கப் பிறந்தவர் எனக் காட்டுகிறது. அந்தப் பலன்களை எப்போது அனுபவிப்பார் என்பதை, நாடி ஜோதிடமானது அவர் பிறந்த ஜாதகத்தில் உள்ள கிரகத்தைக் கோச்சார கிரகம் எந்த வயதில் இணைகிறதோ அல்லது பார்வை தருகிறதோ, அப்பொழுது அனுபவிப்பார் என்று கூறுகிறது.

நமது முன்னோர்கள் வருங்கால சந்ததியரின் வாழ்கை குறித்து எழுதி சென்ற ஓலை சுவடிகளை நாடி ஜோதிடம் என்று கூறுகிறோம். ஆண்கள் வலது கை கட்டை விரல் ரேகையும், பெண்கள் இடது கை கட்டை விரல் ரேகையும் கொண்டு நாடி ஜோதிட ஏடுகள் கணிக்கப்படுகிறது.

ancestors,nadi astrology,past,future ,முன்னோர்கள், நாடி ஜோதிடம், கடந்த காலம், எதிர்காலம்

நாடி ஜோதிடம் 2000 ஆண்டுகள் பழமையான இந்த சுவடிகளை சப்தரிஷிகள் எனப்படும் அகத்தியர், கௌசிகர், வைசியர், போகர்பிரிகு, வசிஸ்தர் மற்றும் வால்மீகி ஆகிய ரிஷிகள் எழுதியதாகக் கூறப்படுகிறது. ஆனால், பெரும்பாலான சுவடிகள் அகத்திய முனிவர் எழுதியதாகவே இருப்பதால், வாசிக்கும் போதும் அவரது பெயரை கூறி வாசிக்கின்றார்கள்.

ஒவ்வொரு ஓலையிலும் பெயர், வயது, இராசி, தாய், தந்தை பெயர், உற்றார், உறவினர், தொழில், கடந்தகாலம், எதிர்காலம் என்று அனைத்தும் கூறப்பட்டு இருக்கும். இதன்படி அந்த நபரின் எதிர்காலம் பற்றி தெளிவாக கூறப்படுகிறது.

இதில் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறார் மும்பையை சேர்ந்த நாடி ஜோதிட நிபுணர் ரவி அவர்கள். இவரிடம் தங்களின் பிரச்னைக்காக தேடி வருபவர்கள் நிம்மதியுடன் செல்கின்றனர். தொடர்புக்கு: 9022552255, 9022662266

Tags :
|