Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நிரவ் மோடியின் ஜாமீன் மனுவை 7வது முறையாக தள்ளுபடி செய்த இங்கிலாந்து கோர்ட்டு

நிரவ் மோடியின் ஜாமீன் மனுவை 7வது முறையாக தள்ளுபடி செய்த இங்கிலாந்து கோர்ட்டு

By: Karunakaran Tue, 27 Oct 2020 1:54:42 PM

நிரவ் மோடியின் ஜாமீன் மனுவை 7வது முறையாக தள்ளுபடி செய்த இங்கிலாந்து கோர்ட்டு

பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளை மூலமாக ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் வாங்கி மோசடி செய்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, வெளிநாட்டுக்கு தப்பி சென்று விட்டார். அதன்பின் இந்திய அரசின் நடவடிக்கையால், இங்கிலாந்தில் கைது செய்யப்பட்ட அவர் லண்டன் சிறையில் தற்போது அடைக்கப்பட்டு உள்ளார்.

நிரவ் மோடியை நாடு கடந்த இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தக்கோரும் வழக்கு விசாரணையில் உள்ளது. இந்த சூழலில் தனக்கு ஜாமீன் கேட்டு நிரவ் மோடி சார்பில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட 6 மனுக்களை லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு தள்ளுபடி செய்திருந்தது.

nirav modi,bail plea,uk court,punjob bank ,நீரவ் மோடி, ஜாமீன் மனு, இங்கிலாந்து நீதிமன்றம், பஞ்சாப்  வங்கி

இந்நிலையில் 7-வது முறையாக மீண்டும் அவரது சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. புதிய ஆதாரங்களின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நிரவ் மோடி தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால் இந்த வாதத்தை ஏற்றுக்கொள்ள மறுத்த நீதிபதி சாமுவேல் கூஸ், நிரவ் மோடியின் ஜாமீன் மனுவை நேற்று தள்ளுபடி செய்தார்.

நிரவ் மோடியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது, சி.பி.ஐ. தரப்புக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. சி.பி.ஐ., வெளியுறவு அமைச்சகம் மற்றும் இங்கிலாந்து சட்டப்பணிகள் குழு ஆகியவற்றின் சிறப்பான ஒருங்கிணைப்பால் நிரவ் மோடியின் ஜாமீன் மனுக்கள் தொடர்ந்து நிராகரிக்கப்படுவதாக சி.பி.ஐ. அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags :