Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நளினிக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள் ஒரு மாதத்திற்கு ரத்து

நளினிக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள் ஒரு மாதத்திற்கு ரத்து

By: Nagaraj Thu, 23 July 2020 10:50:12 AM

நளினிக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள் ஒரு மாதத்திற்கு ரத்து

சிறையில் தற்கொலைக்கு முயற்சி செய்த நளினிக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சிறை விதிகளை மீறிய புகாரில் நளினிக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள் ஒரு மாதத்திற்கு இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஆண்கள் சிறையிலிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் சிறையிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 28 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.

nalini,concessions,cancellation,action,vellore,jail ,நளினி, சலுகைகள், ரத்து, நடவடிக்கை, வேலூர், சிறை

இந்த நிலையில் வேலூர் பெண்கள் சிறையில் உள்ள நளினி சக கைதியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் அறையில் துணியால் கழுத்தை நெரித்து தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியானது. இதற்கிடையில் கொலை வழக்கு தொடர்பாக சிறையில் உள்ள நளினியை புழல் சிறைக்கு மாற்றக் கோரி சிறைத்துறை டிஜிபிக்கு நளினியின், தாயார் பத்மா கடிதம் எழுதினார்.

இந்நிலையில் வேலூர் சிறையில் சிறை விதிகளை மீறிய புகாரில் நளினிக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள் ஒரு மாதத்திற்கு இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பார்வையாளர்கள் நளினிக்கு பொருட்களை வழங்குதல் உள்ளிட்ட சலுகைகள் அனைத்தும் இரத்து செய்யப்படுவதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சக கைதி, வார்டனுடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக நளினி தற்கொலைக்கு முயன்ற நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|