Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கோழிப்பண்ணையில் வெங்காயம் பதுக்கல்... 483 டன் வெங்காய மூட்டைகள் பறிமுதல்!

கோழிப்பண்ணையில் வெங்காயம் பதுக்கல்... 483 டன் வெங்காய மூட்டைகள் பறிமுதல்!

By: Monisha Tue, 10 Nov 2020 09:00:14 AM

கோழிப்பண்ணையில் வெங்காயம் பதுக்கல்... 483 டன் வெங்காய மூட்டைகள் பறிமுதல்!

பெரம்பலூர் அருகே கோழிப்பண்ணையில் பதுக்கிய 483 டன் வெங்காயம் பறிமுதல் செய்யப்பட்டு லாரி மூலம் கூட்டுறவு அங்காடிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

சமையலுக்கு அத்தியாவசிய தேவையான வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பகுதியில் உள்ள காலியான கோழிப்பண்ணையில் அதிக அளவில் வெங்காயம் பதுக்கிவைக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவுக்கு தகவல் கிடைத்தது.

onions,cooperative,test,hoarding,confiscation ,வெங்காயம்,கூட்டுறவு,சோதனை,பதுக்கல்,பறிமுதல்

அவரது உத்தரவின் பேரில், அதிகாரிகள் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது கோழிப்பண்ணையில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த சுமார் 4,500-க்கும் மேற்பட்ட பெரிய வெங்காய மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.

அவற்றின் எடை மொத்தம் 483டன் ஆகும். அந்த வெங்காய மூட்டைகளை பதுக்கி வைத்திருந்தவர்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட வெங்காய மூட்டைகள் லாரி மூலம் கூட்டுறவு அங்காடிகளுக்கு அனுப்பப்பட்டது.

Tags :
|
|