Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா வைரஸில் இருந்து கடவுளால் மட்டுமே காப்பாற்ற முடியும் - மந்திரி ஸ்ரீராமுலு

கொரோனா வைரஸில் இருந்து கடவுளால் மட்டுமே காப்பாற்ற முடியும் - மந்திரி ஸ்ரீராமுலு

By: Karunakaran Thu, 16 July 2020 08:17:46 AM

கொரோனா வைரஸில் இருந்து கடவுளால் மட்டுமே காப்பாற்ற முடியும் - மந்திரி ஸ்ரீராமுலு

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, குஜராத் ஆகிய நான்கு மாநிலங்களில்தான் கொரோனா அதிகமாக உள்ளது. இதனால் மற்ற மாநிலங்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகள் பல தளர்த்தப்பட்டுள்ளன. இதனால் பல மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.

தற்போது கர்நாடகாவில் கொரோனா வைரஸ் தாக்கம் பலமடங்கு அதிகரித்துள்ளது. இந்திய அளவில் குஜராத்தை பின்னுக்குத்தள்ளி கர்நாடகா 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்நிலையில் கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி பி. ஸ்ரீராமுலு, கடவுள் மட்டுமே கொரோனாவிலிருந்து நம்மை பாதுகாக்க முடியும் என்று கூறியுள்ளார்.

corona virus,minister sriramulu,god,karnataka ,கொரோனா வைரஸ், அமைச்சர் ஸ்ரீராமுலு, கடவுள், கர்நாடகா

இதுகுறித்து ஸ்ரீராமுலு கூறியபோது, உலகளவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நாம் அனைவரும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நீங்கள் ஆளுங்கட்சியனரா, எதிர்க்கட்சியனரா, பணக்காரரா, ஏழையா என்று வைரஸ் பாகுபாடு பார்க்காது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், அரசாங்கத்தின் அலட்சியம் அல்லது அமைச்சர்களின் பொறுப்பற்ற தன்மை அல்லது அமைச்சர்கள் மத்தியில் ஒற்றுமை இல்லாததால் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறிக்கொண்டே இருக்க முடியும். இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மையிலிருந்து வெகு தொலைவில் உள்ளன. கடவுளால் மட்டுமே கொரோனாவில் இருந்து நம்மை காப்பாற்ற முடியும் என்று கூறியுள்ளார்.

Tags :
|