Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 2-ம் கட்டமாக கோயம்பேடு மார்க்கெட்டில் 700 காய்கறி கடைகள் திறப்பு

2-ம் கட்டமாக கோயம்பேடு மார்க்கெட்டில் 700 காய்கறி கடைகள் திறப்பு

By: Monisha Mon, 30 Nov 2020 08:34:18 AM

2-ம் கட்டமாக கோயம்பேடு மார்க்கெட்டில் 700 காய்கறி கடைகள் திறப்பு

சென்னையில் ஆரம்ப காலத்தில் கொரோனா தீவிரமாக பரவ கோயம்பேடு மார்க்கெட் காரணமானது. இதனையடுத்து, கோயம்பேடு மொத்த மார்க்கெட் கடந்த மே மாதம் பூட்டி சீல் வைக்கப்பட்டது. பின்னர், கோயம்பேடு மொத்த மார்க்கெட் தற்காலிகமாக திருமழிசைக்கு மாற்றப்பட்டது.

கொரோனா பாதிப்பு குறைய தொடங்கிய பிறகு, உணவு தானிய விற்பனை அங்காடி கடந்த செப்டம்பர் 18-ந் தேதியில் இருந்தும், மொத்த காய்கறி விற்பனை கடைகள் அதே மாதம் 28-ந் தேதியில் இருந்தும், பழமார்க்கெட் கடந்த 2-ந் தேதி முதலும் மீண்டும் கோயம்பேட்டில் இயங்கி வருகின்றன. 1,500-க்கும் மேற்பட்ட சிறு மொத்த காய்கறி கடைகள் மட்டும் திறக்கப்படாமல் இருந்தது.

vegetable,shops,coimbatore,market,merchants ,காய்கறி,கடைகள்,கோயம்பேடு,மார்க்கெட்,வியாபாரிகள்

தங்களுடைய வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சிறு மொத்த வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர். இதைத்தொடர்ந்து கோயம்பேட்டில் முதற்கட்டமாக 800 சிறு மொத்த காய்கறி கடைகள் கடந்த 15-ந் தேதி திறக்கப்பட்டது.

இந்த நிலையில் 2-ம் கட்டமாக மீதம் உள்ள 700 கடைகள் நேற்று திறக்கப்பட்டன. கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் நடந்த இதற்கான திறப்பு விழாவில் காய்கறி வியாபாரி சங்க தலைவர்கள், சி.எம்.டி.ஏ. அதிகாரிகள், கோயம்பேடு போலீசார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags :
|
|