Advertisement

பாகிஸ்தானில் எதிர்கட்சித் தலைவர் அதிரடியாக கைது

By: Nagaraj Tue, 29 Sept 2020 09:13:49 AM

பாகிஸ்தானில் எதிர்கட்சித் தலைவர் அதிரடியாக கைது

எதிர்கட்சித் தலைவர் அதிரடியாக கைது... பிரதமர் இம்ரான் கானின் அரசாங்கத்தை அகற்றுவதற்கான முயற்சிகளுக்கு தலைமை தாங்க உதவுவதாக உறுதிமொழி அளித்த சில நாட்களுக்கு பின்னர், பாகிஸ்தான் ஊழல் தடுப்பு அதிகாரிகள் நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரை அதிரடியாக கைது செய்தனர்.

நாட்டின் தேசிய சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிக்கு தலைமை தாங்கும் ஷாபாஸ் ஷெரீப், பணமோசடி வழக்கில் ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்ததையடுத்து லாகூரில் கைது செய்யப்பட்டார்.

இந்த கைதுகளுக்கு நாங்கள் பயப்படவில்லை என்று ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் (பிஎம்எல்-என்) செய்தித் தொடர்பாளர் மரியம் அவுரங்கசீப் கூறினார். ஊழல் குற்றச்சாட்டுக்களால் வெளியேற்றப்பட்ட மூன்று முறை பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷெரீப், கடந்த ஆண்டு மருத்துவ சிகிச்சைக்காக சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் தற்போது பிரிட்டனில் வசித்து வருகிறார்.

lack of funds,leader of the opposition,arrest,imran khan ,நிதி பற்றாக்குறை, எதிர்கட்சித்தலைவர், கைது, இம்ரான்கான்

முன்னாள் பிரதமரின் மகள் மரியம் நவாஸும் தனது சித்தப்பா கைது செய்யப்பட்டதை ட்விட்டரில் உறுதிப்படுத்தினார். “ஷெரீப் தனது சகோதரருக்கு எதிராக அவரைப் பயன்படுத்த விரும்புவோருக்கு சாதகமாக செயல்பட மறுத்ததால் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தனது சகோதரருக்கு எதிராக நிற்பதை விட சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் நிற்பதை விரும்பினார்” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

அரசாங்கத்தை ராஜினாமா செய்யக் கோரி எதிர்வரும் வாரங்களில் ஒரு எதிர்ப்பு இயக்கத்தைத் தொடங்க இந்த மாத தொடக்கத்தில் உறுதிமொழி அளித்த எதிர்க்கட்சிகள் இம்ரான் கானை பதவியில் இருந்து நீக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டதால் இந்த கைது நடைபெறுகிறது.

நிதிப் பற்றாக்குறைகள், உயரும் பணவீக்கம் மற்றும் நாணய மதிப்புக் குறைப்பு ஆகியவற்றால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கான் அரசாங்கத்திற்கு எதிராக சமீபத்திய மாதங்களில் அழுத்தம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags :
|