Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விமானம் தீப்பிடித்து இருந்தால் எங்களுடைய பணி அதிக சிக்கலாகி இருக்கும் - ஹர்தீப் சிங் புரி

விமானம் தீப்பிடித்து இருந்தால் எங்களுடைய பணி அதிக சிக்கலாகி இருக்கும் - ஹர்தீப் சிங் புரி

By: Karunakaran Sat, 08 Aug 2020 2:51:13 PM

விமானம் தீப்பிடித்து இருந்தால் எங்களுடைய பணி அதிக சிக்கலாகி இருக்கும் - ஹர்தீப் சிங் புரி

‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து இந்தியா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்றிரவு 7.40 மணிக்கு கோழிக்கோடு கரிப்பூர் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அப்போது விபத்தில் சிக்கி விமானம் இரண்டாக உடைந்தது. இந்த விபத்தில் 2 விமானிகள் உள்பட 19 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லி மற்றும் மும்பையில் இருந்து மொத்தம் இரு சிறப்பு நிவாரண விமானங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. பயணிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

plane crash,kerala,hardeep singh puri,fire ,விமான விபத்து, கேரளா, ஹர்தீப் சிங் பூரி, தீ

இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த வேண்டும் என விமான விபத்து புலனாய்வு துறை, மத்திய விமான போக்குவரத்து பொது இயக்குனரகம் மற்றும் விமான பாதுகாப்பு துறை ஆகியவற்றின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மத்திய விமான போக்குவரத்து மந்திரி ஹர்தீப் சிங் புரி கூறுகையில், இரு விமானிகள் உள்பட 19 பேர் உயிரிழந்து உள்ளனர். இது துரதிர்ஷ்டவசமானது. 127 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று கூறினார்.

மேலும் அவர், 190 பயணிகளுடன் வந்த இந்த விமானத்தின் விமானி, ஓடுதள பாதையின் முடிவு பகுதி வரை ஓட்டி செல்ல முயற்சித்து இருக்க வேண்டும். பருவமழை பொழிவால் ஏற்பட்ட சறுக்கலான நிலையால், விமானம் ஓடுதள பாதையில் இருந்து விலகி சென்றுள்ளது. ஒருவேளை விமானம் தீப்பிடித்து இருந்தால் எங்களுடைய பணி அதிக சிக்கலாகி இருக்கும். நான் விமான நிலையத்திற்கு செல்ல இருக்கிறேன் என்று தெரிவித்தார். .

Tags :
|