Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சிங்கப்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் 450 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

சிங்கப்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் 450 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

By: Karunakaran Thu, 11 June 2020 2:40:55 PM

சிங்கப்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் 450 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகில் உள்ள 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இருப்பினும் கொரோனாவால் பாதிப்படைவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

இந்நிலையில் சிங்கப்பூரில் புதிதாக 40 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 38,965 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பிலிருந்து இதுவரை 26,532 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா காரணமாக 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

coronavirus,singapore,china,indians ,கொரோனா வைரஸ்,சிங்கப்பூர்,சீனா,இந்திய தொழிலாளர்கள்

சிங்கப்பூரில் உள்நாட்டு மக்களை விட வெளிநாட்டு தொழிலாளர்களே கொரோனா காரணமாக அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் தங்கியிருக்கும் பல இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. சிங்கப்பூரில் அதிகளவில் இந்திய தொழிலாளர்களே அதிகம் உள்ளனர். அங்கு கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இந்தியர்களும் உள்ளனர்.

சிங்கப்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 450 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் அச்சமடைந்துள்ளனர். உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது குறிபிடத்தக்கது.

Tags :
|