Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா பரவல் அச்சம் காரணமாக நாடாளுமன்ற கட்டடத் தொகுதி மூடல்

கொரோனா பரவல் அச்சம் காரணமாக நாடாளுமன்ற கட்டடத் தொகுதி மூடல்

By: Nagaraj Mon, 26 Oct 2020 2:00:56 PM

கொரோனா பரவல் அச்சம் காரணமாக நாடாளுமன்ற கட்டடத் தொகுதி மூடல்

மூடப்பட்டது...கொரோனா பரவல் அச்சம் காரணமாக நாடாளுமன்ற கட்டடத் தொகுதி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்றிலிருந்து இரண்டு நாட்களுக்கு நாடாளுமன்றம் மூடப்பட்டிருக்கும் எனவும், பணியாளர்கள் வீடுகளில் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

விசேட அதிரடிப்படையின் வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து நாடாளுமன்ற பாதுகாப்புக்காக சேவையில் அமர்த்தப்பட்ட விசேட அதிரடிப்படையின் உறுப்பினர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற கட்டடத் தொகுதி முற்றாக கிருமி நீக்கம் செய்யப்படவுள்ளதுடன் மீண்டும் 28 ஆம் திகதி நாடாளுமன்றம் மீண்டும் பணிகளை ஆரம்பிக்கவுள்ளது.

Tags :