Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இன்று முதல் மீண்டும் பிசிஆர் பரிசோதனைகள்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இன்று முதல் மீண்டும் பிசிஆர் பரிசோதனைகள்

By: Nagaraj Wed, 11 Nov 2020 2:04:07 PM

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இன்று முதல் மீண்டும் பிசிஆர் பரிசோதனைகள்

மீண்டும் பரிசோதனைகள் ஆரம்பம்... யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இன்று (புதன்கிழமை) முதல் மீண்டும் பி.சி.ஆர் பரிசோதனைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

மருத்துவ பீடத்தின் வழக்கமான பணிகளுக்குப் பாதிப்பேதும் ஏற்படாத வகையில் பி.சி.ஆர் பரிசோதனை ஆய்வு கூடம் மருத்துவ பீடத்தில் இருந்து பிரிக்கப்பட்டு, தனியான பாதை அமைக்கப்பட்டுள்ளதுடன், சர்வதேச நுண்ணுயிரியல் ஆய்வுத் தர நியமங்களுக்கமைய பி.சி.ஆர் பரிசோதனைகள் இடம்பெறவுள்ளன.

மருத்துவ பீடத்தில் இருந்து கடந்த முறை இந்தப் பரிசோதனைகளை மேற்கொண்ட மருத்துவர்களான அ.முருகானந்தன், மு.கலாமதி மற்றும் பேராசிரியர் செ.கண்ணதாசன் ஆகியோர் மட்டுமே இந்தப் பரிசோதனைகளில் ஈடுபடவுள்ளனர். இவர்களுடன் பணியாற்றுவதற்கு என யாழ். பல்கலைக்கழகத்தினால் நான்கு நுண்ணுயிரியல் ஆய்வு கூடவியலாளர்களும் புதிதாகப் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

Tags :