Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்ட மக்கள் வெளியே செல்ல வேண்டாம்

மழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்ட மக்கள் வெளியே செல்ல வேண்டாம்

By: Monisha Tue, 01 Dec 2020 3:56:10 PM

மழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்ட மக்கள் வெளியே செல்ல வேண்டாம்

தமிழகத்தில் இதுவரை பெய்த வடகிழக்கு பருவமழையின் அளவு மாற்று பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் அவர் கூறியதாவது:-

வங்கக்கடலில் புதிதாக புயல் உருவாவதையொட்டி போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதால் யாரும் அச்சப்பட வேண்டாம். டிசம்பர் 4 வரை பெருமழை, புயல் வீசக்கூடும் என்பதால் தென்மாவட்ட மக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.

மழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களில் மக்கள் வெளியே செல்ல வேண்டாம். அண்டை மாநில கடற்பகுதியில் மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் அந்தந்த மாநில கரையை அடைய வேண்டும். மேலும், ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை நீர்படாத வகையில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.

rain,warning,monsoon,storm,edappadi palanisamy ,மழை,எச்சரிக்கை,பருவமழை,புயல்,எடப்பாடி பழனிசாமி

மழை காலங்களில் மின்கம்பிகள், தெருவிளக்கு கம்பிகள், மின்மாற்றிகள் அருகில் செல்லவோ, தொடவோ வேண்டாம். கால்நடைகளுக்கு தேவையான தடுப்பூசி மருந்து, பசுந்தீவனங்களை போதிய அளவு இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும். மீட்பு படையினர் ஜேசிபி வாகனங்கள், மரம் அறுக்கும் இயந்திரங்கள், மணல் மூட்டைகளுடன் பாதிப்பு ஏற்படும் இடங்களில் முகாமிட வேண்டும்.

கூடுதலாக ஆயிரம் மின்வாரிய பணியாளர்கள், மின் கம்பங்கள், மின்மாற்றிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும். கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை மாவட்டங்களில் தலா 2 வீதம் பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளன என்று கூறினார்.

Tags :
|
|