Advertisement

வேலூரில் கொட்டும் பனி பொழிவால் மக்கள் கடும் அவதி

By: Monisha Thu, 10 Dec 2020 3:52:54 PM

வேலூரில் கொட்டும் பனி பொழிவால் மக்கள் கடும் அவதி

வேலூர் மாவட்டத்தில் நிவர் புயலின் தாக்கத்தால் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதனால் கடந்த வாரங்களில் பனிப்பொழிவு ஓரளவு குறைவாக இருந்தது. ஆனால் தற்போது கடந்த இரண்டு நாட்களாகவே வேலூரில் கடுமையான பனி மூட்டம் காணப்படுகிறது. காலை நேரத்தில் எதிரே இருப்பது கூட தெரியாத அளவுக்கு பனிப்பொழிவு கொட்டுகிறது.

சென்னை- பெங்களூர் ஆறு வழிச்சாலையில் பனிமூட்டம் அதிகமாக உள்ளது. சாலையே தெரியாத அளவுக்கு பனிமூட்டம் சூழ்ந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வேலூர் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் விடிந்தும் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி செல்கிறார்கள்.

rain,snow,cold,smoke,suffering ,மழை,பனி,குளிர்,புகைமூட்டம்,அவதி

மாலை 5.00 மணிக்கு மேலும் பனிப்பொழிவு அதிகமாக இருக்கிறது. காலை மற்றும் மாலை நேரங்களில் பனியின் தாக்கம் கடுமையாக இருப்பதால் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளே முடங்கி கிடக்கிகிறார்கள். கடும் பனிப்பொழிவு மக்களை குளிரால் வாட்டி வதைத்து உறைய வைக்கிறது. மேலும் இனி வரும் நாட்களில் பனிப்பொழிவும், உறைய வைக்கம் குளிரும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பனியின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க வேலூர் மக்கள் வீதியிலும், வீட்டு முன்பும் குப்பைகள் மற்றும் பழைய பொருட்களை கொளுத்திவிட்டு குளிர் காய்கிறார்கள். கொட்டும் பனிக்கும், உறைய வைக்கும் குளிருக்கும் ஸ்வெட்டர், சால்வை விற்பனையும் சூடுபிடித்துள்ளது. மேலும் பனி அதிகமாக கொட்டுவதால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் சளி மற்றும் காய்ச்சலால் அவதிப்படுகிறார்கள்.

Tags :
|
|
|
|