Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தீபாவளியை முன்னிட்டு டிக்கெட் முன்பதிவில் ஆர்வம் காட்டும் பொதுமக்கள்

தீபாவளியை முன்னிட்டு டிக்கெட் முன்பதிவில் ஆர்வம் காட்டும் பொதுமக்கள்

By: Monisha Thu, 10 Sept 2020 09:24:42 AM

தீபாவளியை முன்னிட்டு டிக்கெட் முன்பதிவில் ஆர்வம் காட்டும் பொதுமக்கள்

கொரோனா நோய் தொற்றுக்கு மத்தியில் தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்வதற்கு டிக்கெட் முன்பதிவில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தென் மாவட்டங்களில் தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும். பொதுவாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தென் மாவட்ட மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல, 3 மாதங்களுக்கு முன்பே ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்வது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி வருகிற நவம்பர் மாதம் 14-ந் தேதி கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது தீபாவளிக்கான முன்பதிவும் வேகமாக நடந்து வருகிறது. ரெயில் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டாலும், வழக்கமான ரெயில் போக்குவரத்து எதுவும் தமிழகத்தில் தொடங்கவில்லை. அதனால் தற்போது இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரெயில்களிலே பொதுமக்கள் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர்.

diwali,tickets,booking,public,special train ,தீபாவளி,டிக்கெட்,முன்பதிவு,பொதுமக்கள்,சிறப்பு ரெயில்

அந்த வகையில் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயிலில் நவம்பர் 12 மற்றும் 13-ந் தேதிகளில் நெல்லை செல்வதற்கான டிக்கெட்டுகள் முழுவதும் விற்றுத்தீர்ந்து, காத்திருப்போர் பட்டியலுக்கு வந்து விட்டது. மேலும் எழும்பூர்-மதுரை (02637/02638) சிறப்பு ரெயிலில் 12-ந் தேதிக்கான டிக்கெட்டுகளும் விற்றுத்தீர்ந்துவிட்டது.

இதேபோல் தூத்துக்குடி, கோவை, மதுரை, திருச்சி, காரைக்குடி ரெயில்களிலும் தீபாவளி பண்டிகைக்கு செல்வதற்கான டிக்கெட்டுகள் வேகமாக முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இது குறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், "கொரோனா நோய் தொற்றுக்கு மத்தியிலும் பொது மக்கள் தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்வதற்கு டிக்கெட் முன்பதிவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது வரை வழக்கமான ரெயில் போக்குவரத்து தொடங்குவதற்காக ரெயில்வே வாரியம் அனுமதி வழங்கவில்லை. சிறப்பு ரெயில்களை இயக்குவதற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகையின் போது கூடுதல் சிறப்பு ரெயில்கள் இயக்க வாய்ப்பு உள்ளது" என்று கூறினார்.

Tags :
|
|